வகையில் உங்கள் வீடு தேடி வரும்
ஜுவல்லரி...
Advocate-High Court`{`Madurai Bench`}`
Mr. R.ஹரிசரவணன்
[B.Sc, BL]
தமிழ்நாடு மாநிலம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் உள்ள தூதை என்ற கிராமத்தை சேர்ந்த விவசாய தொழிலை அடிப்படையாக கொண்ட திரு. N. இராமகிருஷ்ணன் – இராக்கம்மாள் தம்பதிக்கு ஐந்தாவது மகனாக பிறந்தவர் R.ஹரிசரவணன். குடும்பம் வறுமையில் இருந்த சூழ்நிலையில் திருப்பாச்சேத்தியில் உள்ள அரசு பள்ளியில் தனது பள்ளி படிப்பையும் அதன் பின் மதுரையிலுள்ள Madura கல்லூரியில் இளங்கலை அறிவியல் (BSc. Physics) படிப்பையும் அதன் பின் மதுரையிலுள்ள Dr. அம்பேத்கர் சட்ட கல்லூரியில் சட்ட படிப்பையும் (BL) முடித்தார். சில காலம் மதுரை மாவட்ட நீதிமன்றத்திலும் பின் மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்கறிஞராக பணியாற்றிய இவர். தங்க நகைத் தொழிலில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
தனது கடின உழைப்பால் 1998 – ஆம் வருடத்தில் மிகச் சிறிய அளவில் (10 x 10 ) அறையில் இரு பணியாளர்களுடன் தனது KAS ஜுவல்லரி நிறுவனத்தை தொடங்கினார். அனைத்து வாடிக்கையாளர்களிடமும் மிகுந்த நம்பிக்கையும், நன்மதிப்பையும் (Goodwill) பெற்ற KAS ஜுவல்லரி நிறுவனம். தற்போது இரு கிளைகளுடன் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டின் பல இடங்களில் தனது கிளைகளை தொடங்க KAS ஜுவல்லரி நிறுவனர் R.ஹரிசரவணன் ( BSc,BL ) அவர்கள் திட்டமிட்டுள்ளார்.